Monday, July 4, 2011

காந்தியின் புன்னகை

காந்தியின் புன்னகை 
அன்று 
இம்சர்களையும் அஹிம்சர்கள் ஆக்கியதாம்
கல் நெஞ்சங்களையும் கரையச் செய்ததாம் 

இன்று 
குற்றவாளிகளையும் நிரபராதி ஆக்கும்
முட்டாள்களுக்கும் பட்டமளிக்கும் 
இருப்பவர்களிடம் மேலும் சேரும் 
இல்லாதோரின் ஏக்கம் ஆகும் 

அது நிஜப் புன்னகை 
நிகர் இல்லா நகை 
இது நகல் புன்னகை 
எதையும் நிகர் செய்யும் வகை  

No comments:

Post a Comment