காந்தியின் புன்னகை
அன்று
இம்சர்களையும் அஹிம்சர்கள் ஆக்கியதாம்
கல் நெஞ்சங்களையும் கரையச் செய்ததாம்
இன்று
குற்றவாளிகளையும் நிரபராதி ஆக்கும்
முட்டாள்களுக்கும் பட்டமளிக்கும்
இருப்பவர்களிடம் மேலும் சேரும்
இல்லாதோரின் ஏக்கம் ஆகும்
அது நிஜப் புன்னகை
நிகர் இல்லா நகை
இது நகல் புன்னகை
எதையும் நிகர் செய்யும் வகை

No comments:
Post a Comment