Saturday, July 9, 2011

நட்பாகவே விழைகிறேன்

எட்டுத் திக்கும்
முட்டித் திரும்பி
செல்லும் திசை அறியாது இருந்தேன்
எங்கிருந்தோ வந்த நீ
கைகாட்டி மரமாய் நின்றாய்
ஒன்பதாவது திசையாய்
விண்ணை காட்டினாய்
இதோ
விண்ணை முட்ட எத்தனிக்கிறேன்
வென்றால் நட்சத்திரமாவேனோ?
வீழ்ந்தால் விதையாவேனோ? அறியேன்
எதுவானாலும்
உன் நட்பாகவே விழைகிறேன்!

புகைப்படம்: அருண் நாதன்  இடம்: பாம்பன், ராமேஸ்வரம் 

No comments:

Post a Comment