Saturday, July 9, 2011

எங்க வைகை

முன்பொரு நாள் முக்கொம்பு (திருச்சி) சென்று இருந்தேன். இரு கரை தொட்டு செல்லும் காவிரியின் பிரம்மாண்டம் எனக்கு பிரமிப்பூட்டியது. அத்தனை வேகம் இருந்தும் சாந்தமாய் செல்லும் காவிரி என்னை வெகுவாய் ஆச்சர்யபடுதினால். நான் விவரம் அறிந்த வயதில் இருந்தே இரு கரை தொட்டு சாந்தமாய் செல்லும் வைகையை பார்த்ததில்லை. எப்போதாவது எங்கள் வைகையும் இரு கரை தொட்டு செல்வாள்... ஆனால் அப்போதெல்லாம்...

வைகையிலே 
எங்க வைகையிலே
கரை தொட்டிட்டாலும்
நுரை பொங்கிட்டாலும்
வந்திடுமே
வெள்ளம் வந்திடுமே
வீதி வீடெல்லாம் புகுந்திடுமே
செய்கூலி இல்லாம சேதாரம் தந்திடுமே
காவும் வாங்கிடுமே
கண்ணீரு வத்தமுன்னே
கண்ணீரு வத்த முன்னே
வைகையும் வத்திடுமே
கரையும் காஞ்சிடுமே
மைதானம் ஆகிடுமே

தாயின் மார் வற்றினாலும்
அழும் குழந்தை
அவள் கதகதப்பில் தான் அடங்கும்!
அப்படியே
அப்படியே நானும்
எங்கள் வைகையிடம்.

No comments:

Post a Comment