ஆதித் தமிழை புறந் தள்ளி
அன்னியர் நுழைந்து
சமணம் அழித்து, ஆதாரம் சிதைத்தே
சமணம் அழித்து, ஆதாரம் சிதைத்தே
தமிழன்னையின்
வீணை முறித்து எறிந்த போது
பகை முறித்து - வீணை செய்தே
கை நரம்பு அறுத்து
வீணைக்கு நரம்பாய் முறுக்கேற்றியே
அன்னைக்கு கொடுத்து - மொழி காத்திட்ட
தமிழ் சாதியின் வாரிசுகளடா நாங்கள்!
வாழ்ந்து கொண்டிருப்பது நாங்கள்
மெல்லச் சாகுமோ தமிழ் இனி?
வீழ்ந்திடுவோமோ நாங்கள்?
மூச்சு உள்ள வரை
தமிழ் சுவாசிப்போம் நாங்கள்
காற்றில் கரைந்தாலும்
தமிழுக்கே சுவாசம் ஆவோம் நாங்கள்
மெல்லச் சாகுமோ தமிழ் இனி?

No comments:
Post a Comment